மது குடித்த தொழிலாளி சாவு

கோட்டுச்சேரி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு.

Update: 2023-06-15 15:58 GMT

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை மணல்மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது34). கூலித்தொழிலாளி. திருமணமாகாத நிலையில் குடிபோதைக்கு அடிமையானார். நேற்று அவர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அங்குள்ள கோவில் அருகே மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்