மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தொழிலாளி தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-30 16:14 GMT

கோட்டுச்சேரி

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

4 ஆண்டாக குழந்தை இல்லை

காரைக்கால் அடுத்த பிள்ளைத் தெருவாசலை சேர்ந்தவர் பிரதீஷ் (வயது 33). தொழிலாளி. இவருக்கும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மோனிகாவுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை இல்லாத நிலையில், கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்ப பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், 2 மாதத்ததுக்கு முன் மீண்டும் சண்டை ஏற்பட்டதால், கோபம் கொண்ட மோனிகா, கணவரை பிரிந்து நாகப்பட்டினத்தில் இருக்கும் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

விபத்தில் சிக்கினார்

இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கிய பிரதீசுக்கு காலில் அடிபட்டு கிடந்தார். சற்று குணமான பின்னர், தனது அண்ணன் ராமுவுடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வேலைக்கு சென்று வந்தார்.

குழந்தை இல்லாத ஏக்கம், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகம் மற்றும் விபத்தில் சிக்கி காலில் அடிபட்ட வேதனை என பிரதீஷ் தவித்து வந்தார். இந்தநிலையில் தனது வீட்டில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்