தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி வேலைக்கு போனதால் விரக்தி அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-28 17:37 GMT

நிரவி

மனைவி வேலைக்கு போனதால் விரக்தி அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடன்காரர்கள் நெருக்கடி

கருக்களாச்சேரி சுனாமிநகர் 8-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (24). இத்தம்பதிக்கு பிரித்தீஸ்வரன் (7), புவனேஸ்வரன் (6) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

நாகலிங்கம் சரிவர வேலைக்குச் செல்லாமல் மதுகுடித்துவிட்டு ஊர் சுற்றுவதும், கடன்வாங்கி குடும்பத்தை நடத்துவதுமாக இருந்துள்ளார்.இதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அவரை சுற்றி வளைத்து நெருக்கடி தந்தபடி இருந்தனர்.

வேலைக்கு சென்ற மனைவி

இதனால் வேறுவழியின்றி குடும்பத்தை காப்பாற்றும் எண்ணத்தில் சரண்யா காரைக்கால் மதகடியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சென்றார்.

மனைவி வேலைக்குப் போவது நாகலிங்கத்துக்கு பிடிக்கவில்லை. அவரை வேலைக்கு போகவேண்டாம் என தடுத்து வந்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வழக்கம்போல ஓட்டல் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று கணவருக்கு சமைத்து வைத்துவிட்டு, மகன்களை அதே ஊரிலிருக்கும் சித்தி வீட்டில் விட்டுவிட்டு சரண்யா வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் மதுபோதையுடன் மனைவி வேலை செய்த ஓட்டலுக்கு இன்று வந்த நாகலிங்கம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய சரண்யா, வீட்டுக்கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததால், அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு வீட்டு ஹாலில் மின்விசிறியில் சேலையால் தூங்கில் தொங்கியபடி நாகலிங்கம் கிடந்தார். அவரை காப்பாற்றும் எண்ணத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்