தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கோட்டுச்சேரி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2023-08-02 17:16 GMT

கோட்டுச்சேரி

திருநள்ளாறு பேட்டை மணல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலமோகன் (வயது 36). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். இந்த நிலையில் மது பழக்கத்துக்கு அடிமையான பாலமோகன், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இனிமேல் மது குடிக்கக்கூடாது என்று அவரிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமோகன் மது குடித்துள்ளார். இதில் வயிற்று வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்