தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுவையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2023-07-05 17:22 GMT

புதுச்சேரி

புதுவை குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 61). தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. ராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் கடந்த சில மாதங்களாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த ராஜூ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்