தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

அரியாங்குப்பம் அருகே தந்தை திட்டியதால் அதிக அளவில் மாத்திரைகளை தின்நு மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2023-08-25 16:25 GMT

அரியாங்குப்பம்

அபிஷேகப்பாக்கம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 48). இவருக்கு சங்கீதா (43) என்ற மனைவியும், நந்தினி, மதிமிதா ஆகிய 2 மகள்களும் இருந்தனர். கடந்த சில மாதங்களாக முருகையன் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். முதல் மகள் நந்தினி திருமணமாகி கணவருடன் வசித்து வரும் நிலையில், 2-வது மகள் மதிமிதா (24) புதுச்சேரி அரசு பெண்கள் தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

சம்பவத்தன்று முருகையன், வீட்டில் இருந்த மகள் மதிமிதாவை திட்டியதாக கூறப்படுகிறது. அடிக்கடி இதுபோல் தந்தை திட்டியதால் விரக்தி அடைந்த அவர், தந்தை வைத்திருந்த மாத்திரைகளை அதிகளவில் தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மதிமிதா பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து அவரது தாய் சங்கீதா அளித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்