காரைக்காலில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல் - ஆர்வத்துடன் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காரைக்காலில் சீற்றத்துடன் காணப்பட்ட கடலில் சுற்றுலா பயணிகள் சிலர் அச்சமின்றி குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-11-13 22:58 GMT

புதுச்சேரி,

காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்தனர். அவர்களில் சிலர் சீற்றத்துடன் காணப்பட்ட கடலில் அச்சமின்றி குளித்து மகிழ்ந்தனர்.

இதனிடையே கடலில் ஆழமான பகுதிக்குச் செல்ல தடை விதித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி குளிப்பவர்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்