மூதாட்டி தற்கொலை

பாகூர் அருகே மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்,

Update: 2023-07-18 17:24 GMT

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமாவதி (வயது 39). அங்கன்வாடி பணியாளர். அவரது தாயார் பூரணி (67) உமாவதி பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்தநிலையில் பூரணி கடந்த சில நாட்களாக இடுப்பு வலி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்