மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு, தனியார் நிறுவன ஊழியர் ஓட்டம்

புதுவை மேட்டுப்பாளையம் அருகே மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு, தனியார் நிறுவன ஊழியர் உடன் வேலை பார்க்கும் பெண்னுடன் ஓட்டம் பிடித்தார்.

Update: 2023-03-08 16:39 GMT

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் அடுத்த தருமாபுரி பாலாஜி நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 28). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மேலும் பகுதி நேரமாக உணவு டெலிவரி வேலையும் செய்கிறார். திலகவதி என்ற மனைவியும், 10 மாத குழந்தையும் உள்ளது. கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு, அன்று இரவு பாட்டி வீடான அம்புஜம் வீட்டில் தங்கினார். மறுநாள் காலை அங்கிருந்து வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து திலகவதி கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜய் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டியிருந்தது தெரியவந்தது. எனவே, மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு வேறு பெண்ணுடன் விஜய் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்