கணவன், மனைவிக்கு கத்தி வெட்டு

சாராயக்கட தகராறில் விரோதம் காரணமாக கணவன், மனைவிக்கு கத்தி வெட்டு விழுந்தது.

Update: 2023-01-18 18:08 GMT

காரைக்கால்

சாராயக்கட தகராறில் விரோதம் காரணமாக கணவன், மனைவிக்கு கத்தி வெட்டு விழுந்தது.

சாராயக்கடை சண்டை

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி இராயன்பாளையம் நேதாஜிநகரை சேர்ந்தவர் பாரதி (வயது32). பெயிண்டர். இவர், நேற்று மாலை நண்பர் வினோத்துடன் கோட்டுச்சேரி சாரயக்கடையில் குடிக்க சென்றார்.

அப்போது அங்கு வடமட்டத்தைச் சேர்ந்த குமார் (36), சுந்தர் (36) ஆகியோருக்கு இடையே சண்டை ஏற்பட்டு அடித்துகொண்டனர். இதைப்பார்த்த பாரதி, இருவரையும் விலக்கி விட்டுள்ளார்.

கத்தி வெட்டு

அன்று மாலை வீட்டு வாசலில் நின்ற பாரதியை அழைத்து, 'நீ என்ன குமாருக்கு ஆதரவாக பேசுகிறாயா' என கேட்டு சுந்தர் சண்டை போட்டுள்ளார். தொடர்ந்து, கையில் வைத்திருந்த கத்தியால், பாரதியின் கன்னம், கைகளில் வெட்டியுள்ளார்.

இதைப்பார்த்ததும் தடுக்க வந்த பாரதியின் மனைவி சசியையும் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து அவர் தப்பி விட்டார். காயம் அடைந்த கணவன், மனைவி இருவரும் கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்