29-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

காரைக்காலில் கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Update: 2023-08-17 15:51 GMT

காரைக்கால்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட தலைவர் முத்துக்குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில நிர்வாகி தமீம், மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், கலியபெருமாள், திவ்யநாதன், அழகப்பன், ராஜமாணிக்கம், மாநிலச் செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகளுக்கான கடன்தள்ளுபடிக்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்