விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பூரணாங்குப்பத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2023-09-01 16:22 GMT

அரியாங்குப்பம்

பூரணாங்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 59). விவசாயி. இவர் ஆஸ்துமா நோயால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி தனது விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த அவரது குடும்பத்தினர் கோபால்சாமியை மீட்டு, புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கோபால்சாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு, அம்மணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்