தாகூர் கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தாகூர் கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2022-11-26 18:14 GMT

புதுச்சேரி

உழவர்கரை நகராட்சி மற்றும் புதுச்சேரி நகராட்சி நகர வாழ்வாதார மையம், தாகூர் அரசு கலைக்கல்லூரி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. இந்த முகாமை கலெக்டர் வல்லவன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ், வேலைவாய்ப்பு அதிகாரி வேல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முகாமில் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்தனர். 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பல்வேறு வகையான படிப்புகளை படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர். சுமார் 2 ஆயிரம் பேருக்கு இந்த முகாமில் நேர்காணல் நடத்தப்பட்டது. அவர்களில் 453 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்