தேவையின்றி செல்போன் பயன்படுத்தாதீர்

தேவையின்றி செல்போன் பயன்படுத்தாதீர் என்று மாணவர்களுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.

Update: 2023-06-20 16:43 GMT

புதுச்சேரி

புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் நன்றாக படித்து திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய அரசின் உயரிய பதவிகளை அடைய முடியும்.

பள்ளிக்கு அருகில் யாராவது போதைப்பொருட்கள் விற்பது தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இதேபோல் உங்கள் கண் முன்னே யாராவது விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும். மாணவர்கள் தேவை இல்லாமல் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்றார்.

மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் ஆல்பா பள்ளி மாணவர்கள் 25 பேர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்