பாம்பு கடித்து சிறுவன் பலி

பாகூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2023-06-21 16:44 GMT

பாகூர்

பாகூர் அருகே இருளர் குடியிருப்பு புறா தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, தமிழா தம்பதி. இவர்களது 2-வது மகன் ஆனந்த் (வயது 16). இவன், சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள வயல்வெளியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றான். அப்போது அச்சிறுவனை விஷப்பாம்பு கடித்தது. பாம்பு கடித்ததால் கூச்சலிட்ட சிறுவனை தயார் சிகிச்சைக்காக பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் ஆனந்த் உயிரிழந்தான்.

இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக பாகூர் சுற்றி உள்ள பகுதியில் பாம்பு கடித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, திறந்த வெளியில் செல்லும்போது எச்சரிக்கையும் கவனமும் தேவை ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்