தாய், மகள் மீது தாக்குதல்

புதுச்சேரியில் தாய், மகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-12 17:43 GMT

புதுச்சேரி

புதுச்சேரி சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சூர்யகலா (வயது 56). இவர் நேற்று தனது மகளுடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் அங்கு வந்தார். அவர் சூர்யகலாவையும், அவரது மகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அவரது வீட்டில் இருந்த கஸ்தூரி, கிச்சனா ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சீனிவாசன் உள்பட 3 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்