ஆ.ராசா உருவப்படத்தை கிழித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

இந்து மதத்தை அவமதித்து பேசிய ஆ.ராசா உருவப்படத்தை கிழித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-17 17:59 GMT

புதுச்சேரி

இந்து மதத்தை அவமதித்து பேசிய தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் இன்று உப்பளத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் நடராஜன், திருநாவுக்கரசு, ரவி பாண்டுரங்கன், அன்பானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது அவர் ஆ. ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவரது உருவ படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தும் அவமானப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே இந்து முன்னணி சார்பில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் செந்தில்முருகன், செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்