ஏ.எப்.டி. மில்லில் தீ

புதுவை முதலியார்பேட்டை ஏ.எப்.டி. மில்லில் தீ விபத்து ஏற்ப்பட்டது..

Update: 2023-07-22 17:32 GMT

புதுச்சேரி

புதுவை முதலியார்பேட்டையில் ரோடியர் மில் (ஏ.எப்.டி. மில்) உள்ளது. இந்த மில் தற்போது செயல்படாமல் இருக்கிறது. இந்தநிலையில் தியாகு முதலியார் வீதியில் உள்ள அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவையொட்டி இன்று இரவு வாண வேடிக்கை நடந்தது. இதில் தீப்பொறிகள் மில்லின் பின்பகுதியில் குவிந்து கிடந்த குப்பையில் விழுந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்