ராஜஸ்தானில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து

ராஜஸ்தானில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

Update: 2024-07-21 10:24 GMT

Image Courtesy : ANI

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் ரெயில் நிலையத்தில் இருந்து ரேவாரி ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மதுரா அருகே இன்று காலை 2.30 மணிக்கு தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆல்வார்-மதுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என ஜெய்ப்பூர் கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் உத்தர பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. அதற்கு முன்பு கடந்த 18-ந்தேதி, உத்தர பிரதேசத்தின் கோண்டா ரெயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்