டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-09-04 06:02 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. இந்த தேர்வுகளுக்கு சுமார் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற 14-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்