3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன் - வீடியோ வைரல்

சிவகார்த்திகேயன் தனது 3-வது குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-07-15 07:18 GMT

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி வருகிறார். இவர் சினிமாவில் நுழையும் முன்பே திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய சொந்த மாமா பொண்ணான ஆர்த்தியைதான் சிவகார்த்திகேயன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ஆராதனா. ஆராதனா தன்னுடைய 5 வயதிலேயே சினிமாவில் 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடி இருக்கிறார். தற்போது ஆராதனாவுக்கு 11 வயது ஆகிறது.

2021-ம் ஆண்டு பிறந்த 2-வது குழந்தைக்கு குகன் தாஸ் என பெயரிட்டுள்ளனர். அவரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செல்லமாக குட்டி எஸ்.கே. என அழைத்து வருகின்றனர். தற்போது குகன் தாஸுக்கு 3 வயது ஆகிறது.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு கடந்த மாதம் 2-ந் தேதி 3-வது குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவல்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

தற்போது, சிவகார்த்திகேயன் தனது 3-வது குழந்தைக்கு 'பவன்' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், பெயர் சூட்டு விழாவில் எடுத்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்