புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி யு.பி யோத்தா வெற்றி
இன்று நடைபெற்ற போட்டியில் யுபி யோத்தா - யு மும்பா அணிகள் மோதின
ஐதராபாத்,
12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் யுபி யோத்தா - யு மும்பா அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய யு.பி.யோத்தா அணி 38-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.