புரோ கபடி லீக்: டெல்லியை வீழ்த்தி யு.பி.யோத்தா அணி வெற்றி..!

இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தபாங் டெல்லி-யு.பி.யோத்தா அணிகள் மோதின.

Update: 2022-11-16 16:33 GMT

image courtesy: ProKabaddi twitter

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தபாங் டெல்லி-யு.பி.யோத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் யு.பி.யோத்தா அணி 50-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 7-வது வெற்றியை பெற்ற யு.பி.யோத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்