புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி..!

இன்று தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-யு மும்பா அணிகள் மோதின.

Update: 2022-11-19 16:47 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2-வது கட்டமாக இந்த போட்டிகள் புனேவில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த தொடர் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு.பி.யோத்தா-ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் யு.பி.யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-யு மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 32-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்