புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின.

Update: 2022-11-23 15:12 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 39-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெறும் 2-வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்