புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின.

Update: 2022-11-14 15:27 GMT

image courtesy: ProKabaddi twitter

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 43-26 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த சீசனில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான இரண்டு லீக் போட்டியிலும் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் 2-வது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்