புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி..!

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

Update: 2022-11-28 16:48 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-யு.பி.யோத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் யு.பி.யோத்தா அணி 33-32 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 48-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்