புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ்-யு.பி யோத்தா ஆட்டம் டிரா..!

அரியானா ஸ்டீலர்ஸ்-யு.பி யோத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

Update: 2022-11-05 18:18 GMT

image courtesy: ProKabaddi twitter

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது.

இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 45-40 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 39-31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-யு.பி யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 36 புள்ளிகள் எடுத்தன.

இதையடுத்து அரியானா ஸ்டீலர்ஸ்-யு.பி யோத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ஆட்ட நேர முடிவில் 36-36 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்