புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆட்டம் டிரா

குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

Update: 2022-12-09 15:19 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதியில் விளையாடும். எஞ்சிய 4 அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் இருந்து 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

நாளையுடன் லீக் சுற்று முடிகிறது. அதனை தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்று 13-ந்தேதியும், அரைஇறுதி ஆட்டங்கள் 15-ந் தேதியும், இறுதிப்போட்டி 17-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 51 புள்ளிகள் எடுத்தன. இதையடுத்து குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 51-51 என்ற புள்ளி கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்