புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் பாட்னா - குஜராத் அணிகள் மோதின

Update: 2022-12-02 16:46 GMT

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பாட்னா - குஜராத் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி பபுள்ளிகள் எடுத்தன.

கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய குஜராத் 40-34 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்