புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி..!

இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

Update: 2022-11-18 16:22 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2-வது கட்டமாக இந்த போட்டிகள் புனேவில் நடைபெற்று வந்து நிலையில் அடுத்த கட்டமாக இந்த தொடர் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் அரியானா- புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில் புனே அணி 41-28 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியை துவம்சம் செய்து தொடரில் 9-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அந்த அணி 15 போட்டிகள் 9 வெற்றிகளுடன் 54 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்