புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்- உ.பி.யோதா ஆட்டம் டிரா

ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 41-41 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Update: 2022-11-08 15:15 GMT

Image Tweeted By ProKabaddi

புனே,

12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெய்ப்பூர் 37 புள்ளியுடனும், பெங்களூர் புல்ஸ் 36 புள்ளியுடனும், யு மும்பை, தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது.

இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 41-41 என்ற கணக்கில் டிராவானது.

பெங்கால் வாரியர்ஸ் அணி தரப்பில் அட்டகாசமான ரெய்டு சென்ற மனீந்தர் சிங் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 18 புள்ளிகளை குவித்து அசத்தினார். உ.பி.யோதா அணி தரப்பில் ரோகித் 16 புள்ளிகளையும், பர்தீப் நர்வால் 11 புள்ளிகளையும் குவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்