புரோ கபடி : புனே அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெய்ப்பூர்
இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொண்டது.
மும்பை,
9-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இருப்பினும் கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி, இறுதியில் 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9-வது புரோ கபடி லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.
இதனால் 2வது முறையாக புரோ கபடி தொடரில் ஜெய்ப்பூர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.