மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி..!

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

Update: 2022-07-09 12:12 GMT

Image Courtesy : PTI 

கோலாலம்பூர்,

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ,ஹாங் காங் வீரர் கா லாங் அங்கஸ் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-17 9-21 17-21 என்ற செட் கணக்கில் பிரனாய் தோல்வி அடைந்தார்.இதனால் அவர் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்