மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் இறுதிப்போட்டிக்கு தகுதி...!

இந்தியாவின் பிரனாய் , இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்

Update: 2023-05-27 10:39 GMT

Image Courtesy : PTI 

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாய் , இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனாய் கைப்பற்றினார். பின்னர் காயம் காரணமாக கிறிஸ்டியன் அடினாடா போட்டியிலிருந்து விலகினார்.இதனால் இந்தியாவின் பிரனாய் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து , இந்தியாவின் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார் இந்த ஆட்டத்தில் 14 -21 , 17 -21 என்ற கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்