இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஸ்ரீ காந்த்
ஸ்ரீ காந்த் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த் , சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.