இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஸ்ரீ காந்த்

ஸ்ரீ காந்த் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Update: 2023-06-15 10:34 GMT

Image Courtesy : BAI Media 

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த் , சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்