இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் நரகோடாவை எதிர்கொண்டார் .

Update: 2023-06-16 13:04 GMT

Image Courtesy : PTI 

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் நரகோடாவை எதிர்கொண்டார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றோரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த் , சீனாவின் லி ஷி பெங் உடன் மோதினார். இதில் 14-21, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து ஸ்ரீ காந்த் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்