பெண்கள் பிரிவில் ஈரோடு அணி முதலிடம்

பெண்கள் பிரிவில் ஈரோடு அணி முதலிடம்

Update: 2022-06-20 18:20 GMT

வடுவூர்:

வடுவூரில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் ஈரோடு அணி முதலிடத்தை பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் வருமானவரித்துறை அணி, கஸ்டம்ஸ் அணி, ஜி.எஸ்.டி.அணி, இந்தியன் வங்கி அணி ஆகியவையும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, எஸ்.ஆர்.எம். அணி, பி.கே.ஆர். ஈரோடு அணி ஆகியவையும் கலந்துகொண்டு விளையாடியது. இறுதி போட்டியை பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் கஸ்டம்ஸ் அணி முதல் இடத்தையும், ஜி.எஸ்.டி. அணி 2-ம் இடத்தையும், இந்தியன் வங்கி அணி 3-ம் இடத்தையும் பிடித்து கோப்பையை வென்றது.

பரிசளிப்பு விழா

பெண்கள் பிரிவில் பி.கே.ஆர்.ஈரோடு அணி முதல் இடத்தையும், எஸ்.ஆர்.எம். அணி 2-ம் இடத்தையும், தமிழ்நாடு போலீஸ் அணி 3-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது.இதற்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் சீலன், வடுவூர் கைப்பந்து கழக தலைவர் நாச்சியப்பன், வடுவூர் விளையாட்டு அகாடமி செயலாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்