டிஎன்பிஎல்: சஞ்சய் யாதவ் அதிரடி : நெல்லை அணி 209 ரன்கள் குவிப்பு

நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209ரன்கள் எடுத்தது

Update: 2022-07-05 15:47 GMT

கோப்புப்படம்

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 10-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதலே நெல்லை அணி அதிரடியாக விளையாடியது.அந்த அணியின் நிரஞ்சன் 47 ரன்களும்,பாபா அபரஜித் 34 ரன்களும் எடுத்த்னர்.கடைசி சில ஓவர்களில் சஞ்சய் யாதவ், பாபா இந்திரஜித் இருவரும் பவுண்டரி ,சிக்ஸர் விளாசினர். அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் அரைசதம் அடித்தார்.

இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.சஞ்சய் யாதவ்  42 பந்துகளில் 70 ரன்களும் ,பாபா இந்திரஜித் 18 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.தொடர்ந்து   219 ரன்கள் இலக்குடன் மதுரை அணி விளையாடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்