இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; விராட் கோலி இடத்திற்கு போட்டியிடும் இரு வீரர்கள் - வெளியான தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.

Update: 2024-01-22 15:02 GMT

Image Courtesy: PTI

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி வரும் 25ம் தேதி ஐதரபாத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

அந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் சீனியர் வீரரான விராட் கோலி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரர் பின்னர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக அணியில் இடம் பிடிக்க இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதருக்கு இடையே போட்டி நிலவுவதாகவும் இந்த இருவரில் ஒருவர் அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்