பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி

உ.பி. வாரியர்சை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது.

Update: 2024-02-24 21:35 GMT

பெங்களூரு,

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2வது ஆட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியர்ஸ் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிச்சா கோஷ் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் உ.பி. வாரியர்சை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு வீராங்கனை சோபனா ஆஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்