ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

Update: 2022-08-22 06:59 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கி விட்டது.

இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்