புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டி.என்.சி.ஏ அணிகள் அறிவிப்பு

புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-08-16 15:37 GMT

Image Courtesy: @TNCACricket

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு நினைவு அகில இந்திய கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மத்திய பிரதேசம், ஜார்கண்ட், குஜராத், ரெயில்வே, பரோடா, தமிழகம் தரப்பில் இரு அணிகள் என்று மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி தனது முதல் ஆட்டத்தில் ரெயில்வேயை வருகிற 21-ம் தேதி சந்திக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் (சி பிரிவு) அணி முதல் ஆட்டத்தில் அரியானாவுடன் 21ம் தேதி மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணிக்கு சித்தார்த் கேப்டனாகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அணிகள் விவரம் வருமாறு;

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி:- சித்தார்த் (கேப்டன்), விமல் குமார் (துணை கேப்டன்), ராதாகிருஷ்ணன், பத்ரிநாத், முகமது அலி, ஆந்த்ரே சித்தார்த், மாதவ பிரசாத், ரித்திக் ஈஸ்வரன், முகமது, விக்னேஷ், பிரவீன், ஜதாவேத் சுப்பிரமணியன், குர்ஜப்னீத் சிங், லோகேஷ் ராஜ், கிஷோர், ஹேம்சுதேஷன்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி: சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (துணை கேப்டன்), மோகித் ஹரிஹரன், அஜிதேஷ், பாபா இந்திரஜித், பூபதி வைஷ்ண குமார், லோகேஸ்வரன், அதிஷ், சோனு யாதவ், வித்யுத், லக்ஷய் ஜெயின், அஜித் ராம், கோவிந்த், அச்யுத், திரிலோக் நாக், யுதீஸ்வரன்.

Tags:    

மேலும் செய்திகள்