3-வது டி20; பரீத் அகமது அபார பந்துவீச்சு...தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா..!

இந்திய அணியில் விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

Update: 2024-01-17 14:10 GMT

image courtesy; twitter/@ACBofficials

பெங்களூரு,

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் பரீத் அகமது கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். மற்றொரு நம்பிக்கை நட்சத்திர வீரரான ஷிவம் துபே அஸ்மத்துல்லா பந்துவீச்சில் சிக்கினார்.

தற்போது வரை இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 48 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ரோகித் சர்மா 24 ரன்களிலும், ரிங்கு சிங் 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்