வாஸ்து மூலை : அமைதி தரும் வழிமுறைகள்

வீடுகளில் அமைதியான சூழல் நிலவ ஏற்ற வாஸ்து வழிமுறைகளை இங்கே காணலாம்.

Update: 2019-07-20 09:37 GMT
* வடகிழக்குப் பகுதியான ஈசானியம் என்பது அனைத்து வீடுகளிலும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். அந்த பகுதியில் கனமான பொருட்களை போட்டு அடைத்து விடாமல், சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

* கதவுகளைத் திறக்கும்போதும், மூடும்போதும் எவ்விதமான சத்தமும் வரக்கூடாது. அவ்வறு சத்தம் ஏற்படுவது வீட்டில் நிலவும் அமைதியற்ற சூழலைச் சுட்டிக்காட்டுவதாக அர்த்தம்.

* தினமும் மாலை நேரங்களில் வீடுகளில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடத்துக்கு அருகில் அகல் விளக்கேற்றி வைத்தால் வீட்டில் அமைதியான சூழல் நிலவும் என்பது ஐதீகம்.

மேலும் செய்திகள்