நீடாமங்கலம்;
நீடாமங்கலம் பகுதி கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது. நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.