சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.

Update: 2024-07-14 15:57 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, நாளை (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஜூலை 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்