இலங்கை: மோட்டார் பைக்கில் வந்த இருவர் திடீர் துப்பாக்கிச்சூடு!

இலங்கையின் கொழும்பில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-30 14:38 GMT

கொழும்பு,

இலங்கையின் கொழும்பில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பெஸ்டியன் என்னும் இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இதில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் அநுராதபுரத்தை சேர்ந்தவர் என்றும் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக கொழும்பு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்