பாகிஸ்தானில் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் படுகாயம்

ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

Update: 2022-12-30 14:26 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்ட்டுங்க்வா மாகாணத்தில் குலாச்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று போலீசார் மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடம் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கரவாதிகள் அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் 3 போலீசார் படுகாயமடைந்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்