மெக்சிகோவில் மர்ம நபர்கள் பாரில் துப்பாக்கி சூடு; 12 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் மர்ம நபர்கள் பாரில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-10-16 09:06 GMT



ஈராபுவாட்டோ,



மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் ஈராபுவாட்டோ நகரில் உள்ள பார் ஒன்றிற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் ஆவர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

தென்மேற்கு மெக்சிகோவில் 18 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து, கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும். அந்த சம்பவத்தில், நகர மேயர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்